
நாட்டின் வருமானம் என்றால் என்ன – What Is National Income
நாட்டின் வருமானம் – Indian National Income உலகத்தில் சில நாடுகள் செல்வந்த நாடுகளாகவும், சில நாடுகள் ஏழை நாடுகளாகவும், மேலும் பல நாடுகள் நடுத்தரமாகவும் உள்ளன. இவ்வாறு இருக்கும் பொழுது நம் ஒரு நாட்டின் பொருளாதார செயல்பாடுகளை எவ்வாறு தெரிந்து கொள்வது.
நாட்டின் செயல்பாடுகள் உற்பத்தியின் அளவோடு தொடர்புடையது அல்லது மொத்த பொருளாதார நடவடிக்கைகளுடன் தொடர்புடையது. நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பை கணக்கிடுவதற்கு நாட்டு வருமானம் மற்றும் உற்பத்தியின் முறைகள் அளவுகளை பயன்படுத்தப்படுகின்றன.
உங்களுடைய கல்வியின் முன்னேற்றம் மற்றும் மாணவர்களோடு து மதிப்பெண்கள் ஒப்பிட்டு பார்த்து கணக்கு அளிக்கப்படுகிறது. அதே போன்று தான் நம் நாட்டின் பொருளாதார செயல்பாடுகளை வைத்து நாட்டில் எவ்வளவு வருமானம் வருகிறது என்று கணக்கிடப்படுகிறது.
பொதுவாக பல்வேறு காரணங்களுக்கு நாட்டின் வருமானம் ஆனது கணக்கிடுதல் மிகவும் அவசியமாகும். நம்முடைய நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி அறியவும், அரசாங்கத்திற்கு தேவையான பொருத்தமான முன்னேற்றக் கொள்கைகளை உருவாக்கவும், மேலும் உலக நாடுகளுடன் நம்முடைய நாட்டை ஒப்பிட்டு பார்க்கவும் இந்த நாட்டின் வருமானம் கணக்கெடுத்தல் மிகவும் அவசியமான ஒன்றாகிறது.
உள்நாட்டில் உள்ள வருமானங்கள் பற்றி பார்ப்போம் :
மக்களின் வாழ்க்கை தரத்தை அறிந்து கொள்ள தலா வருமானம் அல்லது தனிநபர் வருமானம் ஒரு அளவுகோலாக பயன்படுகிறது. மேலும் பொருளாதார முன்னேற்றம் சார்ந்த அறிஞர்கள் மக்களின் நலத்தை அளவிடும் கருவியாக ஜிஎன்பி – யிள் பல குறைகள் உள்ளதாக கருதுகிறார்கள். அவர்களின் கருத்துப்படி மனித நலம் நாட்டு வருமானத்தை மட்டும் சார்ந்ததல்ல, நாட்டு வருமானத்தை அளவிடுவதில் வறுமை, கல்வி, பொது நலம், பாலின சமன்பாடு, மனித நலம் பற்றிய பல பிரச்சினைகள் ஆகியவற்றை தவிர்க்கிறது.
பணம் அதிகமாக உள்ள நாடுகள் அதாவது செல்வந்த நாடுகள் நாட்டு வருமானத்தில் உயர்ந்தும், மனித வள மேம்பாட்டில் தாழ்ந்தும் காணப்படுகிறது. அதேபோல ஏழை நாடுகள் மனித வள மேம்பாட்டில் உயர்ந்தும் நாட்டு வருமானத்தில் தாழ்ந்தும் காணப்படுகிறார்கள்.
நாட்டு வருமானத்தின் இலக்கணம் :
நாட்டு வருமானம் என்பது ஒரு நாட்டில் ஒரு ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பாகும். இது உற்பத்தியில் இருந்து கிடைக்கும் மொத்த வருமானம் அல்லது உற்பத்திக்கான செயல்படும் மொத்த செலவை குறிக்கும்.
நாட்டு வருமானம் பற்றி அறிஞர்கள் கருத்துக்கள் :
ஆல்பிரட் மார்ஷல்
ஒரு நாட்டின் உழைப்பும் முதலும் அந்நாட்டின் வளங்களுடன் கூடி ஓராண்டு காலத்தில் உற்பத்தி செய்யப்படும் பண்டங்கள் மற்றும் அனைத்து வகையான பணிகள் ஆகிவிட்டது மொத்த நிகர மதிப்பு. இது நாட்டின் நிகர ஆண்டு வருமானம் அல்லது நாட்டின் வருவாய் அல்லது நாட்டு வருமானம் ஈவு என்று அழைக்கப்படுகிறது.
இர்விங் பிஷ்ஷர்
பண்டங்களில் இருந்தோ அல்லது சுற்றுப்புற சூழலில் இருந்தோ கடைசி நுகர்வோருக்கு கிடைக்கும் பணிகள் நாட்டு வருமான ஈவு அல்லது நாட்டு வருமானம் எனப்படும்.
இந்திய நாட்டின் வருமான கணக்கீட்டு குழு :
நாட்டு வருமானம் என்பது மறுமுறை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பாகும்.
மொத்த நாட்டு உற்பத்தி என்பது ஒரு நாட்டில் மொத்தமாக உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் ஒரு தெளிவாக கணக்கிட்டு அளவு என்னலாம். இதனை நுகர்வு மொத்த முதலீடு அரசு வாங்கும் பணங்கள் மற்றும் பணிகளின் அளவு நிகர ஏற்றுமதி ஆகிவற்றின் டாலர் மதிப்பின் கூட்டுத்தொகை எல்லாம்.
அன்றாட விலை மற்றும் நிலையான விலையில் நாட்டின் வருமானம் :
நாட்டு வருமானத்தை அன்றாட விலையிலும் நிலையான விலையிலும் கணக்கிடலாம். அன்றாட உலகில் நாட்டு வருமானம் என்பது, வெளியீடு பண்டங்களின் மதிப்பை அன்றைய அங்காடி விலையில் கணக்கிடப்படுவதாகும். அன்றாட விளையாடியது உண்மை மதிப்பை விட வரி பணவீக்கம் போன்ற ரோட்டில் உயர்வாக இருக்க வாய்ப்புகள் உண்டு. எனது அன்றாட விலையில் கணக்கிடப்படும் நாட்டு வருமானத்தில் பணம் விற்கும் வரிகள் போன்றவற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
எல்லா சமுதாயத்திலும் பணவீக்கம் ஒரு பொதுவான இயல்பாக காணப்படுவதால், அதன் தாக்கத்திலிருந்து உற்பத்தி மற்றும் வருமானத்தின் உயர்வை கழித்து நாட்டு வருமானத்தை கணக்கிடுவதில் அவசியமாகிறது.
எனவே நிலையான உலகில் நாட்டு வருமானத்தை கணக்கிடுவதின் மூலம் சில தேவையான மாற்றங்களை செய்து பணவீக்கத்தின் தாக்கத்தை நீக்கலாம்.
நிலையான உலகில் நாட்டு வருமானம் வருமானத்தின் வாங்கும் சக்தியின் அடிப்படையில் காணப்படுவதால் இது உண்மையான நாட்டு வருமானம் என்று அழைக்கப்படுகிறது.
ஒரு ஆண்டு காலத்தில் ஒரு நாட்டில் உற்பத்தியாகும் பண்டங்கள் மற்றும் பணிகளின் மதிப்பை அன்றாட அடிப்படை ஆண்டில் நிலவிய விலை கொண்டு கணக்கீடு செய்வதால் கிடைக்க பெறும் மதிப்பு நிலையான உலகில் கணக்கிடப்பட்ட நாட்டு வருமானம் எனப்படும். நிலையான விலை என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட அடிப்படை ஆண்டு நிலவும் விளையாக்கும்.
நம் நாட்டு வருமானத்தை தெரிந்து கொள்வதன் அவசியம் :
நாட்டு வருமானம் கணக்கீடு சமுதாய உற்பத்தி, வாணிபம், நுகர்வு கொள்கையை உருவாக்குதல் போன்ற பல காரணங்களுக்கு அவசியமாகிறது.
• பொருளாதாரம் நிலையை அளவிடவும், நாட்டின் பொருளாதார செயல்பாடுகளை கணக்கிடவும் நாட்டு வருமானம் பயன்படுத்தப்படுகிறது.
• பல நாடுகள் மற்றும் பல காலங்களில் பொருளாதார வளர்ச்சியின் வேகம் மற்றும் போக்கை அளவிட நாட்டு வருமானம் அவசியமாகிறது.
• அளவு மற்றும் பொருளாதார உற்பத்தி அமைப்பு முறைகளையும், துறை வாரியான பங்களிப்பு பற்றியும் அறிந்து கொள்ள நாட்டு வருமானம் பயன்படுகிறது.
• பொருளாதாரம் முன்னேற்றத்தின் எதிர்காலப் போக்கை அறிந்து கொள்ள பயன்படுகிறது.
• வளர்ச்சி வீதத்தை அதிகரிக்க தகுந்த பொருளாதார திட்டங்களையும் கொள்கைகளையும் வகுக்க அரசு உதவுகிறது.
• வண்ணங்களின் எதிர்காலத் தேவையை முன்கூட்டியே தெரிந்து கொள்ள நிறுவனங்களுக்கு உதவுகிறது.
• பல துறைகளில் முன் செயல்பாடுகளை பொறுத்து முன்னேற்றம் இலக்குகளை நிர்ணயிக்க பயன்படுகிறது.
• ஒரு நாட்டில் வாழக்கூடிய மக்களின் வாழ்க்கை தரத்தை மற்ற நாடுகளோடு ஒப்பிட்டு அறிந்து கொள்ள பயன்படுகிறது.
நாட்டின் உற்பத்தி முறை – Output Or Product Method
ஓராண்டு காலத்தில் அனைத்து தொழில் நிறுவனங்களும் உற்பத்தி செய்த பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பின் கூட்டுத் தொகையை மொத்த உள்நாட்டு உற்பத்தியாகும்.
பல நிறுவனங்களின் வெளியீட்டு பண்டம் சில நிறுவனங்களுக்கு உள்ளிட்டு பண்டமாகிறது. எடுத்துக்காட்டாக டயர் தொழிற்சாலையில் வெளியிட்டு பண்டமாகிய டயர் இரு சக்கர வாகன தொழிற்சாலைக்கு உள்ளீட்டு பண்டமாகும்.
இந்த இரண்டு நிறுவனங்களின் மொத்த உற்பத்தியை கணக்கிடும் பொழுது டயரின் மதிப்பு இருமுறை கணக்கிடப்படுகிறது. உற்பத்தியின் ஒவ்வொரு நிலையிலும் பண்டங்களின் கூட்டப்பட்ட மதிப்பை தொகுப்பதன் மூலமாக இந்தச் சிக்கலை தவிர்க்கலாம்.
நாட்டு வருமானத்தை கணக்கிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள் :
நாட்டு வருமானத்தை கணக்கிடுவதில் பல பிரச்சினைகள் உள்ளன. இரு முறை கணக்கிடுதல் ஒரு முக்கியமான பிரச்சினையாகும். நாட்டு வருமானத்தை கணக்கிட பல்வேறு முறைகள் இருப்பினும் இருமுறை கணக்கிடுதலை தவிர்த்தல் கடினம் ஆகிறது. இந்த பிரச்சனைகள் சிலவற்றை பற்றி இப்போது பார்ப்போம்.
கருப்பு பணம் – Black Money
சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் தொழில்கள் லஞ்சம் வாங்குதல் போன்றவை, அதிகமாக காணப்படும் நாடுகளில் கருப்பு பணத்தின் புலக்கம் இணைய பொருளாதாரம் என்று கூறும் அளவிற்கு விரிவடைந்து இருக்கிறது.
அதிகாரப்பூர்வமான பொருளாதாரத்திலும் கருப்பு பணம் கணக்கில் வராததால் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் இந்த இணை பொருளாதாரத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
இந்தியாவில் கருப்பு பணமானது எல்லா நிலைகளிலும் ஊடுருவி இருப்பதால் சமுதாயத்தை மட்டுமல்லாமல் மக்களின் அன்றாட வாழ்க்கையின் நிலையையும் பாதிக்கிறது.
கிராமப்புறங்களில் பெரும்பாலான பரிமாற்றங்கள் முறையற்ற நடப்பதால் அப்ப பொருளாதாரம் பணம் சாரா பொருளாதாரம் என்று அழைக்கப்படுகிறது. வளர்ந்து வரும் நாடுகளில் காணப்படும் இத்தகைய பொருளாதாரம் உள்நாட்டு உற்பத்தியின் அளவை இதனுடைய உண்மையை நிலையை விட குறைவாக காட்டுகிறது.
வளர்ந்து வரும் இந்தியாவின் முன்னேற்றம் :
தற்காலத்தில் பணிகள் துறையானது, வேளாண்மை மற்றும் தொழில்துறையை விட வேகமாக வளர்ந்து வருகிறது. பல புதிய பணிகளான வெளித்திறன் நடவடிக்கைகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. சட்ட ஆலோசனை, மருத்துவப் பணி, நிதி உதவி வணிகப் பணிகள் மற்றும் பணிகளின் கூடுதல் மதிப்பு முழுவதுமாக துல்லியமாக கணக்கிடப்படுவதால் நாட்டு வருமானம் குறைந்து மதிப்பிடப்படுகிறது.
வீட்டு வேலைகள் வீட்டை பராமரித்தல் சமூகப் பணிகளின் மதிப்பை நாட்டு வருமானம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. நாட்டு வருமானம் மதிப்பீட்டில் நம் நாட்டுப் பெண்களின் வீட்டில் செய்யும் மதிப்பு மிக்க பணிகளை மதிப்பற்ற பணிகளாக கருதப்படுகிறது.
தானே முன்வந்து செய்பவர்களின் பணிகள் மற்றும் ஊதியம் இல்லா சமூகப் பணிகளின் மதிப்பையும் புறக்கணிக்கப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான ஏழைகள், ஆதரவற்றோர்கள், அனாதைகள், நோயாளிகள் ஆகியோர்களுக்கு அன்னை தெரசாவின் பணி மதிப்பு மிக்கது. எனவே அது மொத்த நாட்டு உற்பத்தி கணக்கேட்டில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.
இந்தியாவின் வளர்ச்சியும் சுற்றுச்சூழல் பயன்களும் :
நாட்டு வருமானம் கணக்கீடு, சுற்றுச்சூழலை பாதிக்கும் தொழிற்சாலைகள் என்றும், சுற்றுச்சூழலை பாதிக்காத தொழிற்சாலைகளும் என்றும் வேறுபடுத்தவில்லை. சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளின் செலவிடும் நாட்டு வருமானத்தை கணக்கில் எடுத்துக் கொல்லப்படவில்லை.
இந்தியாவின் நாட்டு வருமானத்தின் புள்ளிவிவரம் பற்றி பார்ப்போம் :
இந்திய நாடானது விடுதலைக்குப் பிறகு முறையான நாட்டு வருமான கணக்கீட்டு அமைப்பு 1960 ஆம் ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்டது. இந்திய நாட்டு வருமான கணக்கீடு புள்ளியியலில் அமெரிக்காவின் நாட்டு வருமானம் கணக்கீடு அமைப்பையும் பின்பற்றியது. நாட்டு வருமானம் கணக்கிட்டு இந்தியாவின் பரிந்துரைப்படி, மத்திய புள்ளியல் அமைப்பு புள்ளிவிவரங்களின் தரத்தை உயர்த்த தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டது.
அடிப்படை ஆண்டை அண்மைக்கால வரிசைக்கு மாற்றியது அதன் முயற்சியில் ஒன்றாகும். மத்திய புள்ளிகள் அமைப்பு 1970 முதல் 1970 க்கு அடிப்படை ஆண்டை மாற்றி நாட்டு வருமானம் கணக்கீட்டை மேற்கொண்டது.
மேலும் உயர்த்தப்பட்ட புள்ளிகள் விவரங்கள் மற்றும் விரிவாக்கம் மூலம் சி எஸ் ஓ அடிப்படை ஆண்டை 1980 முதல் 1981 க்கும் மேலும் 1993 – 1994 தற்போது ஆறு வருடத்திற்குள் அடிப்படை ஆண்டை 1999 மற்றும் 2000 க்கு மாற்றி அமைத்து இருக்கிறது.
இந்திய நாட்டு வருமானம் – உலக நாடுகளுடன் ஒரு ஒப்பீடு :
இந்தியா சுதந்திரம் அடைந்ததையிலிருந்து இன்று வரை இந்தியாவின் செயல் திறனை நாம் ஒப்பிட செய்துள்ளோம். உலக நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் பொழுது இந்தியாவின் செயல் திறன் எவ்வளவு உள்ளது என்று தெரியுமா..!!
இந்தியாவின் தலா வருமானம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாடுகளுடன் ஒப்பீடு செய்யப்படுகிறது. 2001 இல் இந்தியாவின் தல வருமானம் உயர்ந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளுடன் ஒப்பிட்டு கீழே காட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் தலா வருமானம் 460 டாலர் ஆகும். இது மற்ற ஏழை நாடுகளின் சராசரி தலாவி வேதத்தை விட சிறிய உயர்வாகவே உள்ளது.
வளர்ந்து வரும் நாடுகளில் தல வருமானம் 26 ஆயிரத்து 710 அமெரிக்க டாலர்களாக உள்ளது.
நடுத்தர வருமானம் உடைய நாடுகளில் 1850 அமெரிக்க டாலர்களாக உள்ளது.
குறைந்த வருமானம் உடைய நாடுகளில் 430 அமெரிக்க டாலர்களாக உள்ளது.
ஆனால் இந்தியாவில் தல வருமானம் ஆனது 460 டாலர்களாக உள்ளது.
(இது 2000 ஆண்டின் கணக்கெடுப்பு ஆகும்)
மக்கள் உற்பத்தி காரணங்களை பெற்றிருக்கிறார்கள். அதை உற்பத்தியாளர்களுக்கு அளிக்கிறார்கள். இந்த உற்பத்தி காரணங்களை பயன்படுத்தி நிறுவனங்களின் பண்டங்களையும் மற்றும் பணிகளையும் உற்பத்தி செய்கின்றனர். அவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களும் மற்றும் பணிகளும் மக்களால் வாங்கப்படுகின்றன.
மக்கள் காரணி வருமானத்தை வாரம் கூலி மற்றும் மட்டை என்ற வடிவத்தில் பெறுகின்றனர். இந்த வருமானம் மீண்டும் உற்பத்தியாளர்களுக்கு நூறு சலூன் மூலமாக போய் சேருகிறது. இவ்வாறு வருமானம் உற்பத்தியாளர்களிடமிருந்து மக்களுக்கு மக்களிடம் இருந்து உற்பத்தியாளர்களுக்கும் சென்று கொண்டே இருப்பதற்கு வருமான ஓட்டம் என்று பெயர்.
வருமான ஓட்டம் பணம் வருமான ஓட்டம் மற்றும் உண்மை வருமான ஓட்டம் என்ற இரண்டு பகுதிகளை கொண்டிருக்கிறது.
நாட்டு வருமானம் என்பது நுகர்வோர் முதலீட்டாளர் அரசு மற்றும் அயல் நாட்டு வடிவம் ஏற்றுமதி இறக்குமதி ஆகிய நான்கு கூற்றுகளின் வருமானங்களும் சேர்த்து கணக்கிடப்படுகிறது.

MT தமிழ் : இந்த இணைய தலத்தில் அரசியல், சினிமா, உள்ளுர் செய்திகள், உலக செய்திகள் மற்றும் பல விஷயங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் .