தமிழ் கல்வெட்டுக்கள் வரலாறு
சிவசாசனம் என்றால் என்ன:
தமிழ் கல்வெட்டுகள் வரலாறு | Tamil Kalvettukkal History – வடவேங்கடம் முதல் தென்குமரிக்கு இடைப்பட்ட நம் தமிழகமானது பெரியதெனவும், சிறியெனவும் ஆகிய திருக்கோவில்கள் பலவற்றை தன்னகத்து கொண்டு விளங்குவதை யாவரும் அறிவர்.
நம் நாட்டில் அனைத்து கோயில்கள் இருப்பதற்கு காரணம், பண்டைய தமிழ் வேந்தர்களும், குறுநில மன்னர்களும், அரசாங்கம் பணி புரிந்த அரசியல் தலைவர்களும், சமய பற்று உணர்வுகளாய் திகழ்ந்த தமிழ்நாட்டு செல்வந்தர்களும், பிற அன்பர்களும் தமக்கு தொடர்புடைய நகரங்களிலும் ஊர்களிலும் தம் வழிபாடு கடவுளுக்கு திருக்கோவில்கள் அமைத்து விழா நிகழ்த்த தொடங்கியமே ஆகும்.
கோவில்கள் எல்லாம் நம் முன்னோருடைய சமயப் பற்றியும் பெருமையும் நம்பினோருக்கு அறிவுறுத்தும் நினைவுச் சின்னங்களாகவும், வானளாவா உயர்ந்து காண்போர் கண்களை கவரும் பெருமிதம் உடையதாகவும் இக்காலத்தில் நின்று நிலவுதல் காணலாம்.
கல்வெட்டுத் துறையால் தமிழகத்துக்கு கிடைத்த நலன்கள்:
கோயில்களில் உள்ளே சென்று கருப்ப இல்லில் எழுந்தருளியுள்ள இறைவனை வணங்கி கருப்பை இல்லை சூழ்ந்துள்ள பிரகாசத்தை சுற்றி வரும் போது கருங்கர் சுவர்களின் மேல் வரிசை வரிசையாக எழுத்துக்கள் வரையப்பட்டிருப்பதை பார்க்கலாம்.
தமிழ் கல்வெட்டுகள் வரலாறு
எழுத்துக்கள் சிற்றூலி கொண்டு கல்தச்சர்களால் பொறிக்கப்பட்டவனாகும். அவைகளே கல்வெட்டுக்கள் எனவும் சில சாசனங்கள் எனவும் கூறப்படுகின்றன. அவற்றைப் பார்த்தவர்கள் எழுத்துக்கள் தமக்கு விளங்காமல் அவைகள் எல்லாம் தேவர்கள் தம் தெய்வ மொழியில் முற்காலத்தில் வரைந்து வைத்தால் வேண்டும் என்ன சொல்லி வந்திருக்கின்றனர்.
அத்தகைய நிலையில் நாம் இருந்த காலத்தில் அஃகல்வெட்டுக்கள் நம் தாய் மொழியாகிய தமிழில் எழுத எழுத பெற்றவைகளே என்பதை நமக்கு அறிவுறுத்தியவர்கள் மேலைநாட்டு பேரறிஞர்கள்.
அவர்களுள் ராபர்ட் சிவில், டாக்டர் கீழஹார்ன், டாக்டர் பர்னல், டாக்டர் பூலர், டாக்டர் ஹீல்ட்ஸ் முதலானோர் குறிப்பிடத்தக்கவர் அவர். அவர்களுடைய ஊக்கமும் உழைப்பும் இல்லையேல் அவர்கள் காலப்போக்கில் அழிந்து பயன்படாமல் போயிருக்கும் என்பது திண்ணம்.
இந்திய அரசாங்கத்தினரும் 19 ஆம் நூற்றாண்டின் பிற்காலத்தில் கல்வெட்டுக்களாகவும், புதைபொருள் ஆராய்ச்சி விழா காவும் நிறுவி தக்க அறிஞர்களைக் கொண்டு கோயில்களில் உள்ள கல்வெட்டுகளை படி எடுப்பித்தும், புதைபொருள் ஆராய்ச்சி செய்து அவற்றால் அறிய கிடைக்கும் பழைய வரலாறுகளை ஆராய்ந்து வெளியிடுமாறு செய்தனர்.
அவற்றின் பயனாக பல நூற்றாண்டுகளாக நாம் அறிந்து கொள்ள முடியாத நிலையில் மறைந்து கிடந்த நம் தமிழக வரலாறு சிறிது சிறிதாக வெளிவரத் தொடங்கியது. அன்னியர் ஆட்சியினாலும் நம் நாட்டில் பல தீமைகள் ஏற்பட்டவை உண்மை எனினும், அதனால் சில நன்மைகளும் கிடைத்துள்ளமே நாம் எளிதில் மறந்து விட முடியாது.
அத்தகைய நன்மைகளுள் நமக்கு பழைய வரலாற்றை நாம் அறிந்து கொள்ளுமாறு அரசாங்கத்தினர் கல்வெட்டிலாக மூலம் செய்து வந்த அருஞ்செயல்கள் நம் முன்னோரால் பெரிதும் பாராட்டுக்கு உரியவை ஆகும்.
இனி கல்வெட்டுக்கள் நம் நாட்டில் முதலில் எங்கனம் தோன்றின என்பதை ஆராய்ச்சி காண்போம். பகைவர் முன்னின்று ஆற்றலோடு போர் புரிந்து உயிர்த் துறந்த வீரர்களை நினைவு கூர்தல் பொருட்டு அவர்கள் இறந்த இடங்களில் எல்லாம் அல்லது வேறு தொடர்புடைய இடங்களில் எல்லாம் நடுகல் ஒன்றை அமைத்து விழா நடத்தி பாராட்டுதல், முற்காலத்தில் தமிழ் மக்கள் கை கொடுத்த ஒரு பழைய வழக்கமாகும் உண்மையை பழைய தமிழ் நூலாகிய தொல்காப்பியத்தில் உள்ள,
“காட்சி கார்கோல் நீர்ப்படை நடு கல்
சீர்த்தது சிறப்பு பெரும்படை வாழ்ந்ததலின்
றிருமூன்று வரையில் கல்லோடு புணர”
– வெட்சித் திணை – 5 கல்வெட்டுகள் வரலாறு
என்னும் சூத்திரப் பகுதியினால் நன்கு உணரலாம். அந்நாடுகளின் மேல் போர்க்களத்தில் இறந்த வீரனின் பெயரும் பெருமையும் வரையறுக்கப்படும் வழக்கம் பண்டைய காலத்தில் இருந்தது என்பதை கடைச்சங்க புலவர்களின் பாடல்களால் புலன்படுகிறது.
“நல்லமர்க் கடந்த நாணுடைய மறவர்
பெயரும் பீடும் எழுதி யதர்தொறும்
பீடி சூட்டிய பிறங்கு நிலை நடுக்கல்”
– என்னும் அகநானூற்றுப் பாடலும், கல்வெட்டுகள் வரலாறு
“அணிமயிர் பீலி சூட்டிப் பெயர் பொறித் தினி நட் டனரே கல்லும்”
– என்னும் புறநானூற்று பாடலும்
“நல்வழி கொடுத்த நான் உடை மறவர் செல்லா நல்லிசை பெயரோடு நட்ட நல்லது கவலை என்னும் மிகப் போலவே”
– என்னும் மலைபடுகாடம் அடிகளிலும்,
தெள்ளிதின் உணர்த்துதல் காணலாம். அந்நூலை நுணுகி ஆராயும் எடுத்து பகைவர் முன்னின்று அஞ்சாமல் போர் புரிந்து புகழுடன் இருந்த வீரர்களின் நடு கற்களின் மேல் பொறிக்கப்பட்ட அவர்களுடைய பெயரும் பீடுமே நம் நாட்டில் முதல் தோன்றிய தமிழ் கல்வெட்டுகள் என்பது ஐயம் இன்றி துணியப்படும்.
கிபி ஏழாம் நூற்றாண்டின் இறுதியிலும் எட்டாம் நூற்றாண்டில் தொடக்கத்திலும் நிலவிய பேரரசரும் சைவ சமய குறவர் ஆகிய சுந்தர மூர்த்திகளின் அரிய நண்பரும் ஆகிய சேரமான் பெருமாள் நாயனார் தாம் ஏற்று உள்ள திருவாரூர் மும்மணி கோவையில்,
“பட்டோர் பெயரும் ஆற்றிலும் எழுதி நட்ட கல்லும் மூதூர் நத்தமும்”
– திருவாரூர் மும்மணி
என்று கூறி இருத்தலால் கடைச்சங்க நாளிலிருந்து அவ்வழக்கம் அச்சங்க காலத்திற்குப் பின்னரும் தொடர்ந்து வந்துள்ளது என்பது நன்கு புலனாகிறது.
அக்காலப் பகுதியில் தமிழ்நாட்டில் சமண முனிவர்கள் தங்கி ஆங்காங்கு சங்கங்கள் அமைத்து தம் சமயத்தை பரப்பி வந்து செய்தி வரலாற்று அறிஞர் பலர் அறிந்த ஒரு விஷயமாகும். அம்முனிவர்கள் உண்ணா நோன்பியற்றி உயிர் நீத்த இடங்களில் அவர்கள் பால் அன்பு பூண்டொழுகிய அரசியல் தலைவர்களுக்கும் மாணவர்களும் அண்ணாரின் பெயர்களையும், அறிஞர்களையும் பொறித்து வைத்திருக்கின்றனர்.
அத்தகைய கல்வெட்டுகளை மழை பாறைகளிலும் குன்றுகளிலும் குகைகளிலும் பார்க்கலாம். செஞ்சிக்க டுத்த திருநாதர் குன்றிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆனைமலையிலும் திருச்சிராப்பள்ளி குன்றிலும் கல்வெட்டுக்கள் இக்காலத்திலும் காணப்படுகின்றன.
எனவே நாம் தமிழகத்தில் பண்டைய நாட்களில் அருஞ்செயல் புரிந்து இருந்து பட்ட போர் வீரர்களின் பெயரையும் ஆற்றலையும் உணர்த்தும் முறையில் நடு கற்களின் மேல் முதலில் தோன்றிய தமிழ் கல்வெட்டுக்கள்.
பிறகு சமண முனிவர்களின் சமாதிகளிலும் கருங்கல் படுக்கைகளிலும் பொறிக்கப்பட்டு, அதன் பின்னர் அரசர்களும் பிறரும் எழுப்பித்த கருங்கோவீர்கள் பலவற்றிலும் வரையப்பட்டன என்பது தெளிவாகிறது. இனி கோவில்கள் கல்வெட்டுகளை பொறிக்க தொன்மையாய் இருக்க காரணம் யாது என்பதை அறிவோம்.
கோவில்களில் கல்வெட்டுகள் பொறிக்க காரணம்:
கிபி ஏழாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு முடிய நம் தமிழ்நாட்டில் ஆட்சி புரிந்த பல்லவ அரசர்கள் முதலில் கருங்கற்களில் கோவில்கள் அமைத்தனர். அவர்களுக்கு பிறகு அரசாண்ட சோழ மன்னர்கள் சைவ சமயத்தில் பெரிதும் ஈடுபாடு இல்லாததால் தமிழகத்தை ஆண்டும் கருங்கர் கோயில்கள் எடுப்பித்து பெரும் புகழ் எய்தினார்கள்.
அங்கனம் பாண்டி வேந்தர்களும் தம் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடுகளில் கருங்கல் கோவில்கள் பலவற்றை அமைத்தார்கள். பேரரசர்களின் செயலை பின்பற்றி குறுநில மன்னர்களும் அரசியல் தலைவர்களும் தமக்கு தொடர்புடைய ஊர்களில் பல கோயில்கள் கட்டினார்கள்.
கோவில்கள் எல்லாவற்றிற்கும் நாள் வழிபாடும் திங்கள் விழாக்களும் ஆண்டு விழாக்களும் சிறப்பாக நடைபெற்று வரும் பொருட்டு அவற்றை எடுப்பித்த பெருவேந்தர்களும் சிற்றரசர்களும் பெரும் பொருளும் நிலங்களும் வழங்கினர்.
அவர்களைப் போல் சமய பற்று உடைய பிற அன்பர்களும் கோயில்களுக்கு நிபந்தங்கள் அளித்து பலவகை பட்ட அரங்கள் புரிய முன் வந்தனர். அவர்கள் எல்லோரும் தான் கோவிலுக்கு நிவர்த்தமாக அளித்தவற்றை விளக்கமாக அக்கோவிலின் கரும்பு சுவர்களில் வரைந்து வைத்திருந்தனர்.
சில சமயங்களில் அவற்றின் படி ஒன்றை செப்பேடுகளில் பொறித்து உரிய கோவிலுக்கு கொடுப்பதும் உண்டு. அவர்கள் அவ்வாறு செய்து வந்தமைக்கு காரணம் அவ்வரங்கள் இடையில் நின்று போகாமல் எக்காலத்திலும் நன்கு நடைபெற்று வருதல் வேண்டும் என்ற ஆர்வமே ஆகும். அவை கோயில்களுக்குரிய தக்க ஆதாரமாக அமைந்து என்றும் பயன்பட வேண்டும் என்பது மாம்.
கல்வெட்டுகளை மீண்டும் புதுப்பித்தல்:
கோயில்களுக்கு விடப்பட்டுள்ள நிபந்தங்களை பலரும் உணர்ந்து அங்கு நடைபெற வேண்டிய நாள் வழிபாடு, திங்கள் வழிபாடு, ஆண்டு விழா முதல் என எல்லாம் முறைப்படி தவறாமல் நிறைவேறி வருகின்றனவா என்று ஆராய்வதற்கு பயன்படுமாறு பொதுமக்கள் எல்லோரும் பார்க்கக் கூடிய புர சுவர்களின் மேல் கல்வெட்டுக்கள் வரையப்பட்டுள்ளமை அறியத்தக்கதாகும்.
அக்காலத்தில் கோயில்களுக்கு திருப்பணிபுரிய விரும்பும் அன்பர்கள் முதலில் அரசாங்கத்தினர் இடம் உத்தரவு பெற்று, அக்கோவிலில் உள்ள கல்வெட்டுக்கள் எல்லாவற்றையும் படி எடுத்து வைத்துக்கொண்டு, திருப்பணி முடிந்த பின்னர், அரசியல் அதிகாரிகள் பார்த்து குறிப்பிட்ட இடங்களில் அவற்றை மீண்டும் எழுதுவித்தல் வேண்டும்.
இது பண்டைய தமிழ் வேந்தர்களது ஆணையாகும். இதனால் கல்வெட்டுக்கள் கோயில்களுக்கு எத்தனை இன்றியமையா ஆதாரங்களாக அரசர்களால் கருத்தப்பட்டு அன்னாளில் பாதுகாக்கப்பட்டு வந்தன என்பது தெள்ளீர் புனலாடல் காண்க.
கோயில்களில் நடத்தப்படும் விழாக்கள்:
இனி கோயில்களில் நாள்தோறும் நிகழ்த்துவதற்குரிய வழிபாடுகளும், விழா காலங்களில் நடைபெற வேண்டிய சிறப்பு நிகழ்ச்சிகளும், பகலும் இரவும் இடையின்றி எரிக்கப்படும் நந்தா விளக்குகளும், அங்கு பணி புரியும் தேவர்கன்மிகளின் கடமைகளும், அங்குள்ள அணிகலன்கள், வெள்ளி கலன்கள் செப்பு கலன்கள் முதலியவற்றின் பெயர்களும் அவற்றின் எடைகளும், கோயில் கோபுரம் மண்டபம் திருச்சிற்ற மாளிகை படிமம் முதலியவற்றின் பெயர்களும் அவற்றை அமைப்பு பெயர்களும் கல்வெட்டுகளில் விளக்கமாக குறிப்பிட்டு இருப்பதை காணலாம்.
எந்தெந்த கல்வெட்டுகள் கோவிலில் பொறிக்கப்பட்டுள்ளன:
இங்கனம் கோயிலுக்கு தொடர்புடைய செய்திகள் பலவற்றை உணர்த்தும் கல்வெட்டுக்கள் இல்லாமல் வேறு செய்திகளை கூறும் கல்வெட்டுகளும் கோவிலில் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் அரசர்கள் ஊர் சபைகளுக்கும் கோவில்களுக்கும் அனுப்பிய திருமுகங்களும், அரசாங்க அறிக்கைகளும், குறுநில மன்னர்கள் தமக்குள் செய்து கொண்ட உடன்படிக்கைகளும், அரசர்கள் பொதுமக்களுள் சில வகுப்பினருக்கு வழங்கிய உரிமை பத்திரங்களும், கிராம சபைகள் அமைத்தற்குரிய விதிகளும், அதில் உறுப்பினர் ஆவதற்குரிய தகுதியும் அவர்களின் கடமையும், அச்சபயார் செய்த சில குறிப்பிட்ட தக்க முடிவுகளும், அரசர்கள் அரசியல் அதிகாரிகள் முதலாம் ஊரில் வீர செயல்களை உணர்த்தும் பாடல்களும், அரசியல் தலைவர்களுக்கும், புலவர்களுக்கும், மருத்துவர்களுக்கும், கல்லூரிகளுக்கும், நூல் நிலையங்களுக்கும், அரசியலும் பிறரும் வழங்கிய இடையில் நிலங்களும் வரையறுக்கப்பட்டு இருக்கின்றன.
அவற்றால் பண்டைய தமிழ் வேந்தர்களின் அரசியல் முறைகளும், கிராம ஆட்சியும் சமுதாய வாழ்க்கையும், சமய நிலையும், நாகரிகமும், கல்வி, கைத்தொழில், வாணியும் முதலினவும் அந்நாளில் எவ்வாறு இருந்தன என்பதை நன்கு அறியலாம்.
பொதுவாக கல்வெட்டுகளை நோக்கின் முதலில் ஸ்வஸ் திஸ்ரிதிஶ்ரீ என்ற மங்கள வாசகமும், பிறகு அக்கல்வெட்டு தோன்றிய காலக்குறிப்பும் பின்னர் கல்வெட்டு செய்திகளும் அதன் பின்னர் அதற்கு தொடர்புடையவர்களின் கையெழுத்துக்களும் பொறிக்கப்பட்டிருக்கும்.
தமிழ் கல்வெட்டுகள் வரலாறு:
சில கல்வெட்டுகளில் ஓம்படை கிளவியோடு அவற்றை சிதைத்தார் அடையும் பலி பாவங்கள் சேர்த்து வரையப்பட்டுள்ளன. அவை இது இறக்குவான் கண்களை இடை குமரி இடை, எழுநிற்று காதமும் செய்தார் செய்த பாவமும் எய்துவான் இதற்கு தீங்கு வேண்டுவான் வழி அருக. இது விளக்குவான் தங்கையிடை குமரி இடை ஏழு நூற்றுக்காலமும் செய்தார் செய்த பாவமும் எய்துவான் இதற்கு தீங்கு வேண்டுவான் வலி அருக. இது விளங்குவான், தங்கையிடை குமரி இடை குர்ஆன் பசு கொன்றான் செய்த பாவம் கொன்றான் எனவும் புறவும் ஆம்.
கல்வெட்டுகளில் காணப்படும் காலக் குறிப்புகள் எல்லாம் அந்நாட்டு வேந்துறது ஆட்சியை ஆகும். சில கல்வெட்டுகளில் அரசனது ஆட்சியோடு சகாப்தமும் காலியாத்தமும் கொல்லும் ஆண்டும் குறிப்பிடப்பட்டுள்ளனர். அரசனது ஆட்சிக்கு முன் அவருடைய வீரச் செயலும் சிறப்பு பெயரும் இயற்பெயரும் பொறிக்கப்படுவது பழைய வழக்கம்.
அதோடு இல்லாமல் மெய்க்கி அமைத்து ஆட்சி செய்து வரும் முறை முதல் இராஜராஜ சோழனால் கிபி 893 ஆம் ஆண்டில் முதலில் தொடங்கப்பட்டது. அவனைப் பின்பற்றி மற்ற அரசர்களும் மெய்க்கி அமைத்து கல்வெட்டுகள் வரைய தொடங்கினர்.
அரசனுடைய ஆட்சி ஆண்டு ஏற ஏற மேய்கிருத்தியும் புதிய புதிய செய்திகளோடு வளர்ந்து கொண்டே போகும். அதன் துணை கொண்டு ஒவ்வொரு வேந்தர் உடைய ஆட்சியிலும் ஔவை பாட்டில் எந்தெந்த நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்ளலாம்.
ஆகவே மேற்கிருர்த்திகளோடு அமைத்த கல்வெட்டுக்கள் எல்லாம் வரலாற்று ஆராய்ச்சிக்கு சிறந்த ஆதாரங்களோடு இருத்தல் உணர்வு பலனாகும். நம் நாட்டு வரலாற்று ஆராய்ச்சிக்கு இன்றியமையாததாக உள்ள கல்வெட்டுகள் எல்லாம் படி எடுத்து அச்சிடப்பட்டு வெளிவரின் உண்மையான பளபள வரலாற்றுகளை நாம் அறிந்து மகிழலாம் என்பது திண்ணம்.
(மேலும் கல்வெட்டுக்கள் பற்றிய தகவல்களுக்கு Wikipedia – வை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்)
Read Also : Mttamil

MT தமிழ் : இந்த இணைய தலத்தில் அரசியல், சினிமா, உள்ளுர் செய்திகள், உலக செய்திகள் மற்றும் பல விஷயங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் .