இலக்கண குறிப்பு அறிதல் | Ilakkanam Kurippu Arithal
இலக்கணக்குறிப்பு என்றால் என்ன:
இலக்கணம் என்பது ஒரு சொல்லுக்கு உரிய பொருளை அறிவது இலக்கணக்குறிப்பு ஆகும்.
இதனை நாம் 31 வகையின் மூலம் ஒரு சொல்லின் பொருள்களை அறியலாம்.
• பண்புத்தொகை
• வினைத்தொகை
• பெயரெச்சம்
• வினையெச்சம்
• வியங்கோள் வினைமுற்று
• ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
• உவமைத்தொகை
• உருவகம்
• உம்மைத்தொகை
• எண்ணும்மை
• வினையாலணையும் பெயர்
• தொழிற்பெயர்
• உரிச்சொல் தொடர்
• அடுக்குத் தொடர்
• விளித்தொடர்
• வேற்றுமைத்தொகை
• செய்யுளிசை அளபெடை
• இன்னிசை அளபெடை
• இரு பெயரொட்டுப் பண்புத்தொகை
• இரட்டைக்கிளவி
• மரூவு
• செய்யுள் விகாரம்
• இடைக்குறை விகாரம்
• அன்மொழித்தொகை
• முற்றும்மை
• போலி
• வேற்றுமை உருகும், பயனும் உடன் தொக்க தொகை
• தன்மை பன்மை / ஒற்றுமை வினைமுற்று
• எதிர்மறை தொழிற்பெயர்
• முன்னிலை தொழிற்பெயர்
• முன்னிலை திரிந்த தொழிற்பெயர்
மேலே கூறப்பட்டுள்ள இந்த 31 வகையான இலக்கணங்களைக் கொண்டு ஒரு சொல்லின் இலக்கணத்தை நாம் எளிமையாக அறிந்து கொள்ளலாம்.
இனி இந்த இலக்கணக்குறிப்புகளின் முழுமையான விளக்கம் மற்றும் அவற்றை எடுத்துக்காட்டுடன் பார்க்கலாம்.
1. இலக்கண குறிப்பு – பண்புத்தொகை என்றால் என்ன:
நிறம், வடிவம், சுவை, அளவு, குணம் எண்ணிக்கை ஆகியவற்றை உணர்த்தும் பண்புப் பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர் சொல்லுக்கும் இடையில் “மை” விகுதியும், ஆகிய, ஆன என்னும் பண்பு உறுப்புகளும் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.
பண்பு தொகைக்கு எடுத்துக்காட்டு:
செங்காந்தள் = செம்மை + காந்தல்
(நிறம்)
வட்டத்தொட்டி = வட்டம் + தொட்டி (வடிவம்)
இன்மொழி = இனிமை + மொழி (சுவை)
நெடுந்தேர் = நெடுமை + தேர் (அளவு)
மூவேந்தர் = மூன்று + வேந்தர் (எண்ணிக்கை)
2. இலக்கண குறிப்பு – வினைத்தொகை என்றால் என்ன:
காலம் காட்டும் இடைநிலையும், பெயரெச்ச விகுதியும் மறைந்து நிற்க வினைப் பகுதியை தொடர்ந்து ஒரு பெயர் அமைந்து நிற்பது வினைத்தொகை எனப்படும்.
வினைத் தொகைக்கு எடுத்துக்காட்டு:
வினைத்தொகை காலம் கரந்த பெயரெச்சம் எனப்படுகிறது. இது மூன்று கால நிலைகளையும் உணர்த்தி வரும்.
வினைத்தொகை | வீசு தென்றல் |
இறந்த காலம் | வீசிய தென்றல் |
நிகழ்காலம் | வீசுகின்ற தென்றல் |
எதிர்காலம் | வீசும் தென்றல் |
3. இலக்கண குறிப்பு – பெயரெச்சம் என்றால் என்ன:
முற்றுப்பெறாத வினையானது ஒரு பெயர்ச்சொல்லை கொண்டு முடிவது பெயரெச்சம் என்று அழைக்கப்படுகின்றது.
பெயரெச்சத்திற்கு எடுத்துக்காட்டு:
• “அ” என்ற விகுதியை கொண்டு இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் உணர்த்தலாம்.
எ.கா: படித்த பையன் – இறந்த காலம் (த்+அ)
படிக்கின்ற பையன் – நிகழ்காலம் (ற் + அ)
• “உம்” என்ற விகுதியை கொண்டு எதிர்காலத்தை உணர்த்தும்.
எ.கா: படிக்கும் பையன் – எதிர்காலம் (க் + உம்)
4. இலக்கண குறிப்பு – வினையெச்சம் என்றால் என்ன:
முற்றுப்பெறாத வினையானது ஒரு வினைமுற்று கொண்டு முடிவது வினையெச்சம் ஆகும்.
வினையெச்சத்திற்கு எடுத்துக்காட்டு:
பாடி மகிழ்ந்தனர்,
பொதுவாக வினையெச்சம் ஆனது மூன்று காலநிலைகளையும், உணர்த்தி நிற்கும்.
படித்து முடித்தான் – இறந்த காலம்
படிக்கச் செல்கிறான் – நிகழ்காலம்
கண்டால் மகிழ்வான் – எதிர்காலம்
5. இலக்கண குறிப்பு – வியங்கோள் வினைமுற்று என்றால் என்ன:
வாழ்த்துதல், வைதல், வேண்டல் விதித்தல் பொருளில் வரும் வினைமுற்று ஆகும். இது காலம் காட்டாது.
மேலும் “க”, “இய”, “இயர்” என்ற விகிதிகளுடன் முடியும்.
வியங்கோள் வினைமுற்றுக்கு எடுத்துக்காட்டு:
வாழ்க, வாலி வாழிய வாழியியர், ஒழிக.
6. இலக்கண குறிப்பு – ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் என்றால் என்ன:
ஓர் எதிர்மறை பெயரெச்சத்தின் கடைசி எழுத்து கெட்டுவிடும். இது “ஆ” என்ற ஓசையுடன் முடியும்.
ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சத்திற்கு எடுத்துக்காட்டு:
எய்தாப் பழி தா = த் + ஆ
ஏமரா மன்னன் ரா = ர் + ஆ
7. இலக்கண குறிப்பு – உவமைத்தொகை என்றால் என்ன:
உருவாக்கும் பொருளுக்கும் (உவமேயம்) இடையில் உவம உருபு மறைந்து வருவது உவமைத்தொகை எனப்படும்.
உவமைத் தொகைக்கு எடுத்துக்காட்டு:
மலர்க்கை (மலர் போன்ற கை)
பூக்கை, முத்துப்பால், பூஞ்சேக்கை, தாமரை நயனம், மலரடி, மலர் சேவடி, பூங்கொடி.
8. இலக்கண குறிப்பு – உருவகம் என்றால் என்ன:
உவமைத் தொகையை முன் பின்னாக மாற்றுவது, உவமையை பொறுமை ஏற்று இடையில் “ஆகிய” என்ற சொல் மறைந்து வருவது உருவகம் என அழைக்கப்படுகிறது.
உருவகம் எடுத்துக்காட்டு:
கால கழுதை, கோபத்தீ, கன்னியாகுமரி, மண்ணுலகம் தவமணி மார்பின், தாமரை நயனம்.
9. உவமைத்தொகை என்றால் என்ன:
இரு சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் “உம்” என்னும் இடைச்சொல் மறைந்து விடுவது உவமை தொகை என அழைக்கப்படுகிறது.
உவமைத் தொகைக்கு எடுத்துக்காட்டு:
தாய்செய், அண்ணன் தம்பி
மேற்கண்ட எடுத்துக்காட்டுகள் தாயும் சேயும், அண்ணனும் தம்பி என விருந்து பொருளை உணர்த்துகின்றன.
10. எண்ணும்மை என்றால் என்ன:
இரு சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் “உம்” என்னும் இடைச்சொல் வெளிப்படையாக வருவது எண்ணும்மை ஆகும்.
எண்ணும்மைக்கு எடுத்துக்காட்டு:
பாடுவதும் கேட்பதும், இல்லறனும் துறவனும்
11. வினையாலணையும் பெயர் என்றால் என்ன:
வினைமுற்று வினையை குறிக்காமல், வினை செய்தவரை குறித்தால் அது வினையாலணையும் பெயர் எனப்படும்.
இது தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடங்களிலும், இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய மூன்று காலங்களிலும் அமைந்து வரும்.
வினையாலணையும் பெயருக்கு எடுத்துக்காட்டு:
அகழ்ந்தாரை – இறந்த காலம்
அகழ்கின்றாரை – நிகழ்காலம்
அகழ்வாரை – எதிர்காலம்
12. தொழிற்பெயர் என்றால் என்ன:
ஒரு வினை அல்லது செயலை குறிக்கும் பெயரானது எண், இடம், காலம், பால் ஆகியவற்றை குறிப்பாகவோ வெளிப்படையாகவோ உணர்த்தாமல் வருவது தொழிற்பெயர் ஆகும்.
தொழிற்பெயருக்கு எடுத்துக்காட்டு:
ஈதல், நடத்தல்
13. உரிச்சொல் தொடர் என்றால் என்ன:
தனித்து இயங்கும் ஆற்றல் இல்லாத சால, உறு, தவ, நனி, கூர், கழி, வான், மா, தட, வை, மழ, கடி போன்ற உரிச்சொல் சொற்களுடன் பெயரோ வினையோ தொடர்ந்து வருவது உரிச்சொல் தொடராகும்.
உரிச்சொல் தொடருக்கு எடுத்துக்காட்டு:
தடக்கை, மாமலர், சாலச் சிறந்தது.
14. அடுக்குத்தொடர் என்றால் என்ன:
இரண்டு அல்லது மூன்று முறை அர்த்தமுள்ள சொற்கள் அடிக்கி தொடர்ந்து வருவதும், பிரித்தால் பொருள் தருவதும் அடுக்குத் தொடராகும்.
அடுக்குத் தொடருக்கு எடுத்துக்காட்டு:
ஊழ் ஊழ், எவ்வெவை, வா வா, நன்று நன்று
15. விழித்தொடர் என்றால் என்ன:
ஒருவரை அழைத்தார் பொருட்டு விழிக்கும் தொடர் விழித்தொடர் எனப்படும். விழிவுடன் வினைத் தொடர்வது விழித்தொடர் ஆகும்.
விழித்தொடருக்கு எடுத்துக்காட்டு:
நண்பா எழுது, புலவீர்
16. வேற்றுமைத்தொகை என்றால் என்ன:
ஒரு தொடரில் வேற்றுமை உறுப்புகளில் ( ஐ, ஆல், இன், அது கண்) ஒன்று மறைந்து வந்து பொருள் உணர்த்துவது வேற்றுமை தொகை ஆகும்.
வேற்றுமை துறைக்கு எடுத்துக்காட்டு:
மதுரை சென்றார் (மதுரைக்குச் சென்றார்)
மொழி கற்றான் – இரண்டாம் வேற்றுமை தொகை
தலை வணங்கினான் – மூன்றாம் வேற்றுமைத்தொகை
கல்லூரி சென்றாள் – நான்காம் வேற்றுமை தொகை
கண் கடைப்பார்லை, மலையருவி – ஏழாம் வேற்றுமை தொகை
கண்பார்வை – வேற்றுமை தொகை
17. செய்யுளிசை அளபெடை என்றால் என்ன:
செயலில் ஓசை குறையும்போது உயிர் நெடில் எழுத்துக்கள் தன் ஓசையில் மிகுந்து ஒலிக்கும். அப்படி ஒலிக்கும் போது அதற்கு இனமான குற்ற எழுத்து அருகில் எழுதப்படும். இது “இசை நிறை அளபெடை” எனவும் அழைக்கப்படும்.
செய்யுளிசை அளபெடைக்கு எடுத்துக்காட்டு:
ஓஒதல் வேண்டும் – மொழி முதல்
உராஅர்க்கு உருநோய் – மொழி இடை
நல்ல படா அறை – முழு இறுதி
18. இன்னிசை அளபெடை என்றால் என்ன:
செயலில் ஓசை குறையாத இடத்திலும் இமைக்காக குறில் நெடிலாய் மாறி அளபெடுப்பது இன்னிசை அளபெடை ஆகும். இது “தூஉம்” என்று முடியும்.
இன்னிசை அளபெடைக்கு எடுத்துக்காட்டு:
கொடுப்பதுதூஉம், உண்பதுஉம், துய்ப்பதூஉம்
19. இரு பெயரொட்டுப் பண்புத்தொகை என்றால் என்ன:
சிறப்பு பெயர் முன்னும், பொதுப்பெயர்ப் பின்னும் நின்று இடையில் “ஆகிய” என்னும் பண்பு உருபு தொக்கி வருவது இரு பெயரிட்டு பண்புத்தொகை எனப்படும்.
இரு பெயரிட்டு பண்பு தொகைக்கு எடுத்துக்காட்டு:
சாரைப்பாம்பு, மார்கழி திங்கள், பருத்தினுள்,தமிழ் மொழி
20. இரட்டைக்கிளவி என்றால் என்ன:
பொருள் இல்லாத ஒரே சொல் இரண்டு முறை அடுக்கி வந்து பொருள் தருவது இரட்டைக்கிளவி ஆகும்.
இரட்டைக்கிளவிக்கு எடுத்துக்காட்டு:
சலசலவென்று தண்ணீர் ஓடியது, கலகலவென்று சிரித்தாள், மடமடவென மரம் முறிந்தது.
21. மரூஉ என்றால் என்ன:
எழுத்துக்கள் சிதைந்து உருமாறி வழங்கி வருவது மரூஉ ஆகும்.
இயற்சொல் | மரூஉசொல் |
தஞ்சாவூர் | தஞ்சை |
புதுச்சேரி | புதுவை |
கும்பகோணம் | குடந்தை |
எம் தந்தாய் | என் தாய் |
22. செய்யுள் விகாரம் என்றால் என்ன:
செய்யுளில் அசை, சீர், தலை, அடி, தொடை முதலிரவற்றில் சில இடங்களில் ஓர் எழுத்து மாறுபட்டோ அல்லது ஓர் எழுத்து குறைந்த காணப்படுவது செய்யுள்விகாரம் எனப்படும்.
செய்யுள் விகாரம் எத்தனை வகைப்படும்:
செய்யுள் விகாரம் ஒன்பது வகைப்படும். அவை
•வலித்தல் விகாரம்
• மெலித்தல் விகாரம்
• நீட்டல் விகாரம்
• குறுக்கள் விகாரம்
• விரித்தல் விகாரம்
• தொகுத்தல் விகாரம்
• முதற்கொறை
• இடைக்குறை
• கடைக்குறை
செய்யுள் விகாரத்திற்கு எடுத்துக்காட்டு:
காக்கென்று – காக்கா வென்று என்பதன் தொகுத்தல் விகாரம்
23. இடைக்குறை விகாரம் என்றால் என்ன:
ஒரு சொல்லின் இடையில் ஓர் எழுத்து குறைந்தாலும் பொருள் மாறாமல் வருவது இடை குறை எனப்படும்.
இடைக்குறை விகாரத்திற்கு எடுத்துக்காட்டு:
கண்ணீர் (கண்ணீர் என்பதன் எடை குறை)
கடிந்ததெனை (என்னை என்பதன் எடை குறை)
உவம் – உவ்வம் என்பதன் எடை குறை
24. அன்மொழித்தொகை என்றால் என்ன:
வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உமை ஆகிய தொகைநிலைத் தொடர்களுக்கு புறத்தே அல்லாத சில வேறு சொற்கள் நின்று பொருள் தருவது அன்மொழித்தொகை எனப்படும்.
அன்மொழி தொகைக்கு எடுத்துக்காட்டு:
சிவப்பு சட்டை வந்தார், பூங்குழல் வந்தால், முறுக்கு மீசை வந்தார்.
25. முற்றும்மை என்றால் என்ன:
முற்றுப் பொருளை தருவதற்காக வருகின்ற “உம்” முற்றுமை ஆகும். இது “முழுவதும்” என்னும் பொருளைத் தரும்.
முற்றுமைக்கு எடுத்துக்காட்டு:
யாண்டும்
26. போலி என்றால் என்ன:
ஒரு சொல்லில் உள்ள ஓர் எழுத்து அல்லது பல எழுத்துகளோ மாறி அமைந்து, பொருள் மாறாமல் இருப்பது போலி எனப்படும்.
27. வேற்றுமை உருபு பயனும் உடன் தொக்க தொகை என்றால் என்ன:
ஒரு தொடரில் வேற்றுமை உருபு அதன் பொருளை விளக்கும் பயணம் சேர்ந்து வருவது வேற்றுமை உருப்பும் பயணம் உடன் தக்கதாக எனப்படும்.
வேற்றுமை உருபு பயணம் உடன் தொக்க தொகை எடுத்துக்காட்டு:
மனச்சுமை – ஏழாம் வேற்றுமை உருபு பயனும் உடன் தொக்கு தொகை
தற்காத்து – இரண்டாம் வேற்றுமை உருபு பயணம் உடன் தொக்க தொகை
கைமுறை – மூன்றாம் வேற்றுமை உருபு பயணம் உடன் தொக்க தொகை
28. தன்மை பன்மை ஒருமை வினைமுற்று என்றால் என்ன:
அம், ஆம், எம், எம், ஓம் – விகுதிகளுடன் முடியும் வினைமுற்று தன்மை வினைமுற்று. அன், ஆன், என், ஏன் விதிகளுடன் முடியும் உன்னை முற்று தன்மை ஒருமை வினைமுற்று.
எடுத்துக்காட்டு:
தொலைத்தேன், வாழ்ந்தேன் – தன்மை ஒருமை வினைமுற்று
வாழ்வோம் – தன்மை பன்மை வினைமுற்று
29. எதிர்மறை தொழிற்பெயர் என்றால் என்ன:
எதிர்மறை பொருளில் வருவது எதிர்மறை தொழிற்பெயர் ஆகும்.
எதிர்மறை தொழிற்பெயருக்கு எடுத்துக்காட்டு:
நடவாமை, கொல்லாமை
30. முன்னிலை தொழில் பெயர் என்றால் என்ன:
விகுதி பெறாமல் வினைப் பகுதியே தொழிற்பெயராதல் முன்னிலை தொழிற் பெயராகும்.
முன்னிலை தொழிற்பெயருக்கு எடுத்துக்காட்டு:
தட்டு, உரை, அடி
31. முன்னிலை திரிந்த தொழிற்பெயர் என்றால் என்ன:
இவை விகுதி பெறாமல் முன்னிலை திரிந்து வரும் தொழிற்பெயர்கள் ஆகும்.
முன்னிலை திரிந்த தொழிற்பெயருக்கு எடுத்துக்காட்டு:
தொழிற்பெயர் | கெடுதல் | சுடுதல் |
முன்னிலை தொழிற்பெயர் | கெடு | சுடு |
முன்னிலை திரிந்த தொழிற்பெயர் | கேடு | சுட |
மேலும், பல்வேறு தகவல்களுக்கு தொடர்ந்து படியுங்கள் Mttamil

MT தமிழ் : இந்த இணைய தலத்தில் அரசியல், சினிமா, உள்ளுர் செய்திகள், உலக செய்திகள் மற்றும் பல விஷயங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் .